பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வித்தன் 67 ஒன்றும் புரியாமல், எதைக் கேட்கவில்லையா என்கிறீர்கள்?’ என்றேன் நான்,

அதோ கேட்கிறதே, அந்தச் சிரிப்பொலியைத் தான்! அதோ கேட்கிறதே, அந்தச் சிரிப்பொலியைத் தான்!” என்ருர் அவர்.

கானும் உற்றுக் கேட்டேன். எனக்குக் கேட்க வில்லை!" எனக்கு அந்தச் சிரிப்பொலி கேட்கவேயில்லை. இைல்லையே, எனக்குக் கே ட் க வி ல் இலயே!” என்றேன் குழப்பத்துடன். கேட்காது; ஒரு காள்-ஒரே ஒரு நாள்-என் வாழ்வில் பங்குகொண்ட பாவத்துக்காக என்னுடைய சாவிலும் பங்கு கேட்கும் உனக்கு,உன்னைப் போன்றத் தமிழ்காட்டுப் பெண்களுக்கு அந்தச் சிரிப்பொலி கேட்கவே கேட்காது' என்று முணுமுணுத்த வண்ணம் மேலே இரண்டடி எடுத்து வைத்தவர், கான் செத்தால் நீயும் என்னைப்போல் மறுமண ம் செய்துகொள்வாயா? அதற்கு அன்பே காரணம் என்று அவனிடம் சாதிப்பாயா, லலிதா?’ என்று கேட்டுக்கொண்டே என்னை நோக்கித் திரும்பினர். இதற்கு கான் என்ன சொல் வேன்? சிரிச் க முடியாமல் சிரித்தேன்! அவ்வளவுதான்; * இப்படித்தான் லலிதா, அவளும் இப்போது என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிருள்! இப்படித்தான் லலிதா, அவளும் இப்போது என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டி ருக்கிருள்' என்று அவர் கத்த ஆரம்பித்துவிட்டார்.