பக்கம்:அவள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

லா. ச. ராமாமிருதம்

அதற்குமேல் கோர்ட் கிடையாது.

பதிம் தேஹி பதிம் தேஹி பதிம் தேஹி'

கதை இங்குதான் கேட்டாற் போலிருக்கிறதே!

இப்போது களைப்பில் நான் சாய்ந்தேன்.

பாஸ்கர், அணு சக்தியில் நீ மீண்டாயா? காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்ததா? Crisis எனும் மதில் மேல் பூனை சரியான இடத்தில் குதித்ததா? ஈதெல்லாம் பதிலே கிடைக்காத கேள்விகள். அவரவர் பூத்ததற்குத் தக்கபடி, கேள்விகள் மேல் சுமை ஏற்றும் மழுப்பல்கள், பதில் ஆகா. கண்ணாமூச்சி கண்டுபிடிப்பு ஆகிவிடாது.

ஆனால், பாஸ்கர், காதல், காதல் என்று சொல்லிக் கொண்டு காலம் காலமாய், காவியமாகவும், கவிதையாகவும், கதைகளாகவும், பெருமூச்சாகவும், மலையாய் I want him எனக்கு அவன் வேணும்—இப்படியும் தேவையெனும் பெயரில், இப்படியும் ஒரு மகத்தான மூர்க்கம் உண்டா? என்ற வியப்பு எழுந்தக் கணமே—இந்த மூர்க்கத்தைக் கண் கூடாகக் கண்டதே ஒரு மகத்தான அனுபவம்தான். இந்த வேணும் பொருளாய் விளங்கும் உனக்குக்கூட இந்த தரிசனம் கிடையாது- ஆனால் எதேச்சை வழிப்போக்கன் எனக்குக் கிடைத்துவிட்டது.

இந்த உணர்வு தன் பட்டாசுத் திரிக்கூத்தை என்னில் ஆடிய தக்கணமே, என்னுள் கடல் பொங்கி நுரை வழுக்கி, I fell in love with your wife. கூடவே என் வெறுமையின் வெறிச்சு, அதன் முழு பயங்கரத்துடன் கரடி தழுவியதும் நான் பொடிப் பொடியாக நொறுங்கிப்போனேன்.

Ah the beautiful flood of tears!

“Tea திவாகர் or Coffee?”

இனி எழுத அதிகம் இல்லை. ஏன், ஏதுமில்லையென்றே சொல்வேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/128&oldid=1496946" இலிருந்து மீள்விக்கப்பட்டது