பக்கம்:அவள்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கறந்த பால் 269

'லல்லி என் தவறு-இல்லை, இல்லை.' தவடையில் ஒரு கையால் மாற்றி மாற்றி தட்டிக்கோண்டாள். 'தவறு செய்தவள் நான். ஏமாந்து போனவள் நான் . சின்ன வயசில் பெத்தவா ரெண்டு பேரையும் இழந்துட்டு தனியாக வாழ நேரிடும். என் போன்றவர்கள் கதி, இப்படித்தான். என்னை ஏமாத்தினவரைக் குத்தம் சொல்லி என்ன பயன்? ஏமாந்தவள் நான். அன்னிக்கு கூடப் பார்த்தேன் அவனை. அவன் என்னைப் பார்க்கவில்லை. யாரோடேயோ போய்க் கொண்டிருந்தான். பெண்டாட்டியா? இன்னொரு ஏமாளியா? யார்கண்டது? ஒழுங்காய் வாழ்ந்தால் சரி. யாருக்குத்தான் ஆசை இல்லை? உங்கள் விளம்பரம் கண்டதும் வாழ்க்கையில் என் அந்தஸ்தை மீண்டும் பெற ஒரு சபலம். லல்லி பிரச்சனையை எந்தமாதிரி தீர்த்துக்கொவது என்று அப்போது தெரியாது. என்றேனும் ஒரு நாள்... அதுவரை நாகம்மா. அவ்வளவுதான், அந்த சமயத்துக்கு முக்யமாய் தெரிந்தது என் மீட்சி--அவ்வளவுதான்.”

ரேணு புன்னகை புரிந்தாள்.

நாகம்மா வெளியே வந்தாள். அவள் இரு கைகளிலும் ஏந்திய தட்டில் இரு கோப்பைகளில் இருந்து மணமான ஆவி பறந்தது.

பாஸ்கர் டீயை மெதுவாக அனுபவித்துப் பருகினார். ஜன்னலுக்கு வெளியே சர்வ நிசப்தம், சந்துதான், ஆனாலும் சாவ சுத்தம்,

ரேணு டீ சாப்பிடவில்லை. அவள் கைகள் அவள் மடியில் அமைதியான சிறகுகளாய் ஒன்றன் மேல் ஒன்றாய் உறங்கிக் கொண்டிருந்தன.

அவள் காலடியில் லல்லி தானே தன்னுடன் ஏதோ பேசிக்கொண்டு ஏதோ விளையாடிக் கொண்டிருந்தாள்.

பாஸ்கர் எழுத்து நின்று-என்ன உயரம்!-- குனிந்து லல்லியைத் தூக்கிக்கொண்டார். சாவியை ரேணுவிடம் மறுபடி ஒப்படைத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/313&oldid=1497863" இலிருந்து மீள்விக்கப்பட்டது