பக்கம்:அவள்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீம்புக்கு மருதாணி 305

எது? வந்தும், கரைமீது மோதி—

ஒருநாள் அவர்கள் கூடத்தில் உடைந்தது.

துளசி அவள் குழந்தை கையைப் பிடித்துக்கொண்டிருந்தாள்.

"போயிட்டு வரேன் அண்ணா!"

அவர் அவளைக் கண்னெடுத்துக்கூடப் பார்க்க வில்லை. வெற்றிலையில் சுண்ணாம்புத் தடவிக்கொண்டு இருந்தார்.

"பட்டுப் பட்டும், சொல்லச் சொல்லப் போறே. சரி. ஆனால் மறுபடியும் இங்கே படியேறமாட்டாய் என்றே எதிர்பார்க்கிறேன்; எக்காரணத்தைக் கொண்டும்..."

எனக்கு முதுகுத்தண்டு சில்லிட்டது. அந்த அமைதி, அந்த தோரணை, பொறுக்கியெடுத்த சொற்கள், ஊடே ஒரு menace.

பிள்ளை பக்கத்தில் நின்றுகொண்டிருந்த மாமி, பெண் பக்கம் நடத்தாள்.

அதற்கும் பிள்ளை முகம் நிமிரவில்லை.

ஒருநாள் தற்செயலாய் மாமியை மார்க்கெட்டில் சந்தித்தேன். -

"நீங்கள் எங்கள் வீட்டுக்கு வரக்கூடாதா? துளசியை ஆசிர்வாதம் பண்ணக்கூடாதா?”

பதில் சொல்லத் தெரியாமல், அசட்டுச் சிரிப்பு சிரித்தேன். "செளக்யம்தானே?" என்றேன்.

"எல்லாம் உங்கள் ஆசீர்வாதம். துளசி, வாழ ஆசைப் படுவது நியாயமில்லையா? ஆனால் லேது ரொம்பவும் கஷ்டப்பட்டுட்டான்.'

அ.—20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/349&oldid=1497867" இலிருந்து மீள்விக்கப்பட்டது