பக்கம்:அவள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாக்ஷாயணி 179

எப்போதுமே பிடிப்பதில்லை. அத்தோடு பாட்டு வாத்தியார் பிழைப்பே இப்படித்தான். நான் பேசாமலே அப்படியே போய்விட்டேன். எனக்கு இதெல்லாம் கேட்டுத் தெரிந்து என்ன ஆகவேனும்?

இதெல்லாம் பற்றி நான் சிந்தனைகூடச் செய்ய வில்லை. ஆனால் மூன்று நாட்கள் கழித்து, மாலை நான் வெளிக்கிளம்பத் தயாராகிக் கொண்டிருக்கையில் அறைக் கதவை டக்டக்கென்று நாசுக்காய் விரல்கணுவால் தட்டும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தேன். உன் தகப்பனார் நின்று கொண்டிருந்தார்.'

'உள்ளே வரலாமா, மிஸ்டர் பசுபதி?" நான் வழி விட்டேன். 'ஹூம்!” சுற்று முற்றும் பார்த்தார். நாற்காலி தேடினாரோ என்னவோ? உடையின் வண்ணான் மடிப்பு கலையாதபடி உடம்பை ஜாக்கிரதையாய் இறக்கிக்கொண்டு பாய்மேல் உட்கார்ந்தார். எனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டேன். உங்கள் நேரத்தை வீணாக்குகிறேனோ? அப்படி ஒன்றும் இல்லை. என் நேரம் எனக்குக் காத்துக் கிடக்கும்." சடக்கென நிமிர்ந்து பார்த்தார். 'மிஸ்டர் பசுபதி, இப்பொழுது உங்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைததால் என்ன செய்வீர்கள்?" 'இதென்ன கேள்வி? பிறகு சொல்கிறேன். நீங்கள் முதலில் சொல்லுங்கள். ஆயிரம-ஏன் ஆயிரத்தைந்நூறாகத்தான் இருக்கட்டுமே! ஒரு மட்டாய்க் கிடைத்தால் என்ன செய்வீர்கள்? ' என்ன செய்ய முடியாது? என்ன வேணுமானாலும் செய்யலாம். குதிரைவாலில் கட்டி ஒரு மட்டாய்த் தோற்கலாம்; கெலித்தால் பதினைந்தாயிரமாய்ப் பண்ணலாம்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/223&oldid=1496393" இலிருந்து மீள்விக்கப்பட்டது