பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனகமாலையார் இலம்பகம்135



“அஞ்சனக் கோல் கண்ணுக்கு மைதீட்டுமே யன்றி அது தன்னை அழகுபடுத்திக் கொள்ளத் தெரியாது. அறிவுரையும் அப்படித்தான்; மற்றவர்களுக்குச் சொல்லப் பயன்படுமே தவிர அது தனக்குப் பயன்படாது” என்று தெளிந்தான்.

அச்சணந்தி ஆசிரியர் கையில் பிரம்பு வைத்துக் கொண்டு தன்னை அதட்டுவது போல் இருந்தது. “தம்பி; இன்னும் சில மாதம் பொறுத்துக் கொள்” என்று சொல்வது போல இருந்தது.

அச்சணந்தி பார்த்திபனுக்குத் தேரில் இருந்து கீதை மொழி கூறிய கண்ணனாகக் காணப்பட்டார்; ‘கடமை பெரிது; அதற்கு முதலிடம் தருக’ என்று கூறுவது நினைவுக்கு வந்தது.

பார்த்திபன் மறுபடியும் கடமை வீரனாக மாறினான். தானும் ஒரு மனிதன்தான்; நினைவுகள் வருவது இயல்பு தான் என்று கூறி அந்தக்காதல் நினைவுகளுக்கு இறக்கைகள் பூட்டி அவற்றை மனம் போன போக்கில் பறக்க விட்டான்.

சின்ன வயதில் அவன் மற்றவர்களோடு மாந்தோப்புக்குச் செல்வது உண்டு; உரியவர்களுக்குத் தெரியாமல் மரம் ஏறிக் காய் பறித்ததும் உண்டு; அப்பொழுது அகப்பட்டுக் கொண்டு திண்டாடியதும் உண்டு; மற்றவர்கள் அவனை மாட்டி விட்டு வேடிக்கை பார்த்ததும் உண்டு; கந்துக்கடன் மகன் என்பதால் அவர்கள் மன்னித்தது மட்டும் அல்ல, மடி நிறையப் பழங்கள் கட்டித் தந்து ‘அப்பாவிடம் கொடு’ என்று சொல்லி அன்பு காட்டிய நிகழ்ச்சியும் உண்டு; வேண்டுமென்றால் அடிக்கடி வந்து போ என்று சொல்லி அனுப்பி இருக்கிறார்கள்; விலகி நின்றவர்களுக்கு அது வியப்பைத் தந்தது.

“ஏண்டா மரம் ஏறினால் அவர்களே மடி நிறையக் கட்டிக் கொடுப்பார்களா?” என்று கேட்டனர். பார்த்தால் தெரியவில்லையா?” என்று பதில் சொன்னான்.