பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64. தாவும் மான்குட்டி

காளமேகப் புலவர் ஒரு முறை சிதம்பரம் நடராசப் பெருமானைக் கண்டு வழிபடுவதற்குச் சென்றிருந்தார். சிதம்பர தரிசனத்தின் மகிமையைப் பற்றிப் பலரிடத்துப் பல காலம் கேட்டுக் கேட்டு ஆசையையும் பக்தியையும் வளர்த்துக் கொண்டு அங்கே போவதற்குக் காத்திருந்தவர் அவர்.

சிதம்பரம் கோவிலுக்கும் தலத்துக்கும் தனியுரிமை படைத்தவர்கள் தில்லை மூவாயிரவர். இறுமாப்பும் தங்கள் படிப்பிலும் பதவிகளிலும் அகந்தையும் கொண்டவர்கள் தில்லை மூவாயிரவர். எல்லோரும் தங்களை மதித்து மரியாதை செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறவர்கள். ஆனால் அந்த அளவுக்கு அவர்கள் பிறரை மதிக்க மாட்டார்கள். கம்பர் உட்பட அநேகம் புலவர்களோடு தகராறு செய்து பழக்கப்பட்டவர்கள். அவ்வாறிருந்ததனால் தில்லை மூவாயிரவர் என்றால் எல்லோருக்குமே ஒரு விதத்தில் பயம் ஏற்பட்டிருந்தது. காளமேகப் புலவர் சிதம்பர தரிசனத்துக்கு வரப்போகிற செய்தி தில்லை மூவாயிரவருக்கு எட்டியது. அவர்களிடம் இருந்த குறும்புப்படி அவரிடமும் ஏதாவது வம்பு செய்ய வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

காளமேகப் புலவர் வந்தார். தரிசனம் செய்தார். மான், மழு ஏந்திய கரத்தினனாய்க் கூத்தப் பெருமான் பொன்னம்பலத்தே ஆடும் கோலாகலக் காட்சி அவர் உள்ளத்தை ஈர்த்தது.

கூத்தப் பெருமானின் கையில் தாவிப் பாய்கிறார் போல் விளங்கித் தோன்றிய மான்குட்டி, மேல் நோக்கி ஓடிப் பறக்கிறாற் போன்று அழகாகக் காட்சி தந்தது. நடராசப் பெருமானுடைய திருமுகத்துக்கு நேரே தன்னுடைய முகத்தையும், முன்னங் கால்கன்ளயும் தூக்கிக்கொண்டு தோன்றிற்று மான்குட்டி அக்காட்சியில் உணர்வெல்லாம் பறி கொடுத்து அவர் நின்ற போது தில்லை மூவாயிரவர்கள் வந்து அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் வந்து சூழ்ந்து கொண்ட விதத்தி-