பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 அணிந்தருளிய இறைவர்.பால் அ ன் பு வைத்துத் தியானித்துப் போற்ரு தாராகிய தீயோர் கூட்டத்தை விட்டு விலகி உய்வாயாக. -று. குறித்தொருவர் கொள்ளாத கொண்டார் என வும் திங்கட் குறுங்கண்ணி கொண்டார் என வும் தனித் தனி இயையும். குறித்தொருவர் .ெ கா ஸ் எ த என்றது, பிறரெவரும் குறிக்கொண்டு முயன்று தமது ஆற்றலாற் படைத்துக் கொள்ளமுடியாத என்ற பொரு ளுடையதாய் இறைவன் கொண்டருளும் அருளுருவின் இயல்பினேப் புலப்படுத்தியவாறுனர் க. உள்ளாதார் . அன்பில்ை நினையாததியோர். ஒருவு- நீங்குவாயாக. இறைவனது அருள்வழி நின்ற சீவன் முத்தர்களாகிய அடியார்களேச் சிவனெனவே தெளிந்து முக்கரணங். களாலும் வழிபடுக என்பார், தொண்டர் பாதம் குறித்து வாயாலும் சொல்லித் தொழு ன்ருர். சிவ பத்தரல்லாதாராகிய பிறர் இறைவனது திருவருளே மறக்கும் படி செய்து தீயவழிகளிற் கொண்டுசென்று மலங்களானகிய பிறவித்துயருள் வீழ்த்துவராதலின் மீளாத் துன்பத்திற்குக் காரணமாகிய அத்தகைய தீயோரது தொடர்பினே அறவே விலகி ஒழுகுக என வற்புறுத்து வார், திங்கட் குறுங்கண்ணி கொண்டார் மாட்டு உள்ளாதார் கூட்டம் ஒருவு' என அறிவுறுத்தி யருளினர் குறுங்கண்ணி - முடியில் அணியத்தக்க தாகிய சிறியம லே. ஒருபா லுலகளந்த மாலவனு மற்றை யொருபா லுமையவளா மென்ருல்-இருபாலும் நின்னுருவ மாக நிறந்தெரிய மாட்டே மால் நின்னுருவே மின்னுருவோ நேர்ந்து. (41)