பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 அளவே ஈர்ந்து எனமாறுக, இறைவனது சடை மீது விளங்கும் பிறைமதி வளர்ச்சியின்றி யிருத்தற் குரிய காரணங்களே தற்குறிப்பேற்ற அணியமைய அம்மையார் கற்பித்துரைத்த நயம் அறிந்து மகிழ்தற் குரியதாகும். திங்க ளிதுசூடிச் சில்பலிக்கென் றுணர்திரியேல் எங்கள் பெருமானே யென்றிரந்து-பெங்கொளிய வானேர் விலக்காரே ல் யாம் விலக்க வல்லமே தானே யறிவான் றனக்கு. (43) இ-ள்: எங்கள் பெருமானே, ஒளிதிகழ் இளம் பிறையாகிய இதனைச் சென்னியிற் சூடிக்கொண்டு இழிந்த பிச்சை யுணவை யேற்றற் பொருட்டு ஊர் தோறும் திரியாதே' என இறைவனே இரந்து வேண்டிப் புகழ்மிக்க வானேர்கள் விலக்க முன் வராது போவ ராயின், உணர்த்துவார் பிறரை யின் றித் தானே எல்லாவற்றையும் உணரவல்ல முற்றறிவினனுகிய அப்பெருமானுக்கு(இதனே யறிவித்து) விலக்கும் ஆற்ற லுடையோம் (சில்வாழ்நாட் பல் பிணிச் சிற்றறிவின ராகிய) யாமோ? கr-று, தேய்ந்து சிறுகும் திங்களேச் சடையிற் சூடி ஒளி தந்த பெரியோனகிய நீ, ஒளிமாழ்.குஞ் செய்வினே யாகிய பிச்சைத் தொழிலே மேற்கொள்ளலாகாதென விலக்கு வார், திங்களிது சூடிச் சில்பலிக்கென் றுணர் திரியேல்’ என்ருர். பொங்கு ஒளி-தாம் உளராம் காலத்து மிக்குத் தோன்றுதலாகிய புகழ். ஒளிய-ஒளியினையுடைய; பெயரெச்சக் குறிப்பு. இறைவனுக்குப் பிறர் சொல்லத் தக்க அறிவுரை எதுவுமில்லை யென்பார் 'தானேயறி வான் தனக்கு என்றும், தவ வலிமையும் ஞானமும்