பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண் டார்கள் மும்மதிலும் வெந்தீ யினிவழியக் கண்டாலு முக்கண் ணுங் கண். (84) இ-ள்: இறைவனுடைய கண்கள், (கொடுவினே யைச் செய்து இறைவைேடு) மாறுபட்டவர்களாகிய அவுனர்களுடைய முப்பு:சங்களும் வெம்மைமிக்க தீயி ல்ை அழிந்தொழியக் கண்டனவாயினும், சுடர்விட்டுப் பொங்கியெரியும் தீயும் குளிர்ச்சி தரும் மதியும் தன்னெ திர்ப்பட்ட பொருள்களிற் பரவும் கடுவெயிலேயுடைய ஞாயிறும் ஆகிய முச்சுடர்களைப் போன்று முறையே அழித்தலும் தண்ண ருள் செய்தலும் நோய் நீ க் கி க் காத்தலும் ஆகிய மூவகை யியல்புகளும் ஒருங்குடை மையால் முக்கண் கண் எனப்போற்றப் பெறுவன வாயின. எ-று. கண் மும்மதிலும் தீயினில் அழியக் கண்டாலும் பொங்கெரியும் தண் மதியும் கடுஞ்சுடரும் போலும் முக் கண்ணும் என முடிக்க, கடுஞ்சுடர்- கடுங்க திராகிய சூரியன்’ கண்ணுரக் கண்டுமென் கையா ரக் கூப்பியும் எண் ணுர எண்ணத்தால் எண்ணியும் - விண்ணுேன் எரியாடி யென் றென்றும் இன்புறுவன் கொல்லோ பெரியானேக் காணப் பெறின். (85) இ.ஸ் : (பிறவாயாக்கைப்) பெரியோனகிய இறை வன (அவனருளாற்புறத்தே) காணப் பெறுவேன யின் அவனது திருமேனியழகினே என் கண்களால் நிறையப் பருகியும் என் கைகள் குளிரும் வண்ணம் அவன் திருவடிகளைப் பல முறை கைகூப்பி வணங்கி பும் அவனது திருவருட் பெருமையினே நெஞ்சார