பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பெருந்திப் பிழம்பு முழுவதையும் இறுகச்செறித்துக் கையினுற் பொறுக்கு மியல்புடையதாக்கி நின் திருத் கரத்தில் ஏந்திக் கொண்டனேயோ? எ-று. அழலாட வங்கை சிவந்ததோ வங்கை அழகால் அழல் சிவந்த வாருே - கழலாடப் பேயாடு கானிற் பிறங்க வன லேந்தித் தீயாடு வாயிதனே ச் செப்பு. (98) இ~ள்: பேய்கள் ஆடுகின்ற காட்டினிடமாகத் தியின் நடுவே நின்று, ஒளிவிளங்குந்தீயினைக் கையி லேந்தி வீரக்கழல் ஒலிக்க ஆடவல்ல பெருமானே, நினது அழகிய கையானது இடைவிடாது தீயினையேந் திப் பழகின மையால் செம்மை நிறமுற்றதோ? அல்லது நின் திருக்கரத்தின் அழகினைப் பொருந்தினமையால் அந்நெருப்புத்தான் செம்மை நிறத்தைப் பெற்றதோ? இதனைத் தெளிவாகக் கூறுவாயாக. எ-று. ஆடுதல் - பொருந்திப் பழகுதல், இறைவன் தீவண் ணகைத் திகழும் திரும்ே ரிைப் .ெ ப லி வி னே அம்மையார் புனேந்து போற்றியவாறு. செப்பேந் திளமுலையாள் காணவோ தீப்படுகாட் டப்பேய்க் கணமவைதாங் காணவோ-செப்பெனக் (கொன் ருகத்தா னங்கா ந் தனலுமிழு மைவாய நாகத்தா யாடுன் னடம். (99) இ- ள்: வாயைத் திறந்து திப்போலும் நஞ்சினை யுமிழும் ஐந்தலே நாகத்தினை நின் திருமேனியில் அணிந்துள்ள பெருமானே, ஆடுகின்ற நினது திருக் கூத்து, செப்பினை யொத்துத் தோன்றும் கொங்கை