பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 அடிபேரிற் பாதாளம் பேரும் அடிகள் முடிபேரின் மாமுகடு பேருங்- கடகம் மறிந்தாடு கைபேரின் வான்றிசைகள் பேரும் அறிந்தாடும் ஆற்ரு தரங்கு. (77) இ~ள்: எம் இறைவரே, (ஊன்று மலர்ப் பாதமா கிய) நும் திருவடி சிறிது இடம் .ெ ப ய ரு ம | யி னு ம் கீழுள்ள உலகுகள் தத்தம் நிலேபெயர்ந்து அழிந்து விடும் (அண்டமுற நிமிர்ந்தாடும்) நுமது திருமுடி சிறிது இடம் பெயருமாயினும் அண்டமுகடு சிதர்ந் தழி யும். கடகம் என்னும் அணி புடைபெயர்ந்து புரளும் துர்முடைய திருக்கைகள் வானிடத்தே சிறிது இடம் பெயரினும் வானமுந் திசைகளும் நிலேகெட்டழிவன. (நீர் ஆடல் புரிதற்கமைந்த பெருவெளியாகிய) இவ் வாங்கு நுமது திருக்கூத்தினைத் தாங்குதற்கேற்ற வலி யுடையதன்று ஆதலால் (அதன் மென்மைத் த ன் மையை) அறிந்து (தீங்கு நேராவண்ணம் கு றி க் கொண்டு) ஆடுவீராக. எவறு. பேர்தல்- இடம்பெயர்தல். மறிந்தாடுதல் - மேலும் கீழும் புடைபெயர்ந்து புரளுதல். இறைவனது பெருந் திருக்கூத்தின் பெருமையினே விரித்துரைக்கு முகமாக அதன் துண்மையினேயும் குறிப்பினுல் உணர்த் தியவாறு அறிந்து மகிழத்தக்கதாம். அரங்கமாப் பேய்க்காட்டி லாடுவான் வாளா இரங்குமோ எவ்வுயிர்க்கும் ஏழாய் - இரங்குமேல் என்னுக வையான் ருன் எவ்வுலகம் ஈந்தளியான் பன்னுள் இர ந்தாற் பணிந்து. (78)