பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*テぶご لُزُو صلى الله عليه وسلم s நினேந்தும், விண்ணகத்தில் விளங்குபவனே, தீயின் நடுவே திருக்கூத்தியற்றுபவனே என அவ்விறைவனது பெரும் புகழை எனது நாவினுற் பலமுறை சொல்லியும் இன் புறுவேனல்லவா? எ-று. எற்புடம்பு தாங்கிய அம்மையார், கயிலேயில் வீற்றிருந்தருளும் இறைவனது திருவோலக்கக் காட்சி யைக் கண்ணுரக் காணவேண்டு மென்னும் பேரார்வத் துடன் விரைந்து செல்லும்பொழுது அற்புதத்திருவந் தாதியாகிய இதனைப் பாடிக்கொண்டு செல்கின் ரு ராதலின், பெரியானேக் காணப்பெறின் அவனே மன மொழி மெய்களாகிய முக்கரணங்களாலும் வழிபட்டு இன் புறுவேனல்லவா’ என இனி, தாம் பெறவிருக்கும் சிவானந்தப் பெரும் பயனே உலகமக்களுக்கு வெளியிட் டருள்கின்றர். பெரியான் - தனக்கு ஒப்பாரும் மிக்கா ரும் இல்லாத தனி முதல்வன்; மகாதேவனுகிய சிவன் என்பது பொருள். ஆர்தல் - அங்கங்களினுற் பெறக் கூடிய பயனே முற்றும் நிரம்பப் பெறுதல். பெறினும் பிறிதியாதும் வேண்டேம் நமக்கீ துறினு முருதொழியு மேனும்-சிறிதுணர்த்தி மற்ருெருகண் நெற்றிமேல் வைத்தான் றன் பேயாய நற்கணத்தி லொன் றுய நாம். (86) இ~ள் : பிறரெவர்க்கும் இல்லாத ஒப்பற்ற அனற் கண்ணினச் சிறிதே விழிக்கச் செய்து தனது நெற்றி யிற்கொண்டருளிய சிவபெருமானது பேய்ச்சுற்றமாகிய நல்ல சிவகணங்களுள் ஒன்ருய் விளங்கும் நாம், நமக்கு இப்பேய் வடிவு என்றும் பொருந்தியிருந்தாலும் அன்றி இடைக்காலத்தில் நம்மைவிட்டு நீங்கிகுலும்