பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாராய்ச்சிப் பகுதி (கந்தரந்தாதி) 157 யாகப் பரணி-தாழிசை 19, 371; விசேடக் குறிப்புரைபக்கம் 2(;5). செய்யுள் 96. (திருக்கை) ; பூநீ சம்பந்தர் தேவாரம் தமிழில் ருக்வேத சாரம் என்பதைத் தென்னுரல் (தமிழ்) சிவபத்தி ருக்கு ஐயம்போக உரைத்தோன் எனத் தெளிவு பெற உரைத்துள்ளார். செய்யுள் 97. (சிறுமிக்கு): (i) இச்செய்யுளில். உலகம் iயக்கருதித்1 தும்மும் போதெல்லாம் குமர சரணம் ” ன் று சொல்லுங்கள் உய்வீர்கள் என்னும் ஒரு எளிதான தேசத்தைச் சுவாமிகள் சொல்லியுள்ளார். இவ்வுபதே சத்தை யாவரும் அவசியம் அதுட்டித்துப் பயனடைதல் வேண்டும். (ii) வேடகிைய கண்ணப்பரது எச்சிலை, . அன்பே பிரதானம் என்று சிவபிரான் பாராட்டி உண்டது போல, வேட்டுவச்சியாம் வள்ளியம்மையின் நலத்தை அன்பே பிரதானம் என்று முருகபிரான் பாராட்டித் துய்த்த காரணத்தால் வள்ளியம்மையொடு முருகவேள் செய்த லீலை க%ளக் கூறும்பொழுது அருணகிரியார்க்குக் கண்ணப்பர் ருாபகம் வரும். திருப்புகழில் 'வதன. சரோருக” (668) என் நறும் பாடலையும் பார்க்க. செய்யுள் 100. (செல்வந்தி); தேவசேனை, வேல், கழு மலம் (சிகாழி) இவைதமைத் தியானிக்க வரும் பயன்களைக் கறும் இப்பாட்டு. கந்தரங்தாதியின் பெருமை இக்கந்தரந்தாதி சுவாமிகளுக்கு வாதில் வெற்றி தந்த நூலாதலாலும், வேல், மயில், சேவல், தேவசேனை, வள்ளிப் பிராட்டி, முருகர் திருவடி, முருகர் திருப்புகழ் ஆகிய இவைதமைச் சிந்தை செய்வதால் வரும் பெரும் பயனை நன்கு எடுத்து ஒதியுள்ள காரணத்தாலும் (அந்தாதி 26, !. தும்மின உடனே 'சிவாய' எனும் வழக்கம் முன்பு துே. இறைவன் உதவினன் தும்மினர் சிவாய பேரில் தொட்ர்ந்து-திருவாலவா யுடையார் திரு விளையாடற் புராணம் 49.10.