பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாராய்ச்சிப் பகுதி (கவித்திறம்) 205. 'சந்தமெல்லாம் அடிச் சாத்தவல்ல மறைஞான சம்பந்தன் IIII-8-11 கடவூர்); சந்தமிகு ஞானமுனர் பந்தன் (II34-11-பழுவூர்); சந்தமே பாடவல்ல தமிழ் ஞான சம்பந் தன்- (I-12-11-எனக் கூறியுள்ளது கவனிக்கற்பாலது. சம்பந்தர் அருளிய தேவாரத்தில்-முக்கியமாய்ப் பண் சாதாரி-திருவிராகத்தில் உள்ள சந்த பேதங்களை யெல் லாம் (III-67-81 பதிகங்கள்) அப் பெருமானது திருவரு ளால் நன்கு உணர்ந்து மகிழ்ந்து அருணகிரியார் பின்பற். றினர். சம்பந்தரே முருகவேள், அவரல்லது வேறு தெய் வமில்லை (அமண் சேனை...கழுமலங்கற் குரைத்தோன் அல தில்லை தெய்வங்களே-கந். அந். 29) எனப் பரவிப் பணிந் தனர். (பக்கம் 153 பார்க்க) 5 அருணகிரியார் இசை ஞானியார் மேலும் வரகவியாதலின் முருக வேளின் தண்டை யொலி, சதங்கை ஒலி, கிண்கிணி ஒலி, சிலம்பு ஒலியி னின்றே சந்த கீத இலக்கண நுணுக்கங்களை எல்லாம் இவர் அறிந்தனர். "இசைத்திடுஞ் சந்தபேதம் ஒலித்திடும் தண்டை கழும் இ ఢీ, ஒலித்திடு *ಿ 劉 ‘சதங்கை தருகீதம் (திருப். 204), நாதகித கிண் கிணி (திருப். 236, 100), கிண்கிணிச் சிறுகிதம் (திருப் புகழ் 107), இனிய நாத சிலம்பு (திருப்.23)-என வருவன காண்க. தண்டை ஒலி, கிண்கிணி ஒலி, சதங்கை ஒலி, நூபுர ஒலியினின்றும்-கீத இலக்கணங்கள் மாத்திரமன்றுமறை (ரகசியப் பொருள்கள்) கோடிக் கணக்கானவை. யுணர்ந்து மகிழ்ந்தனர். 'இனமறை விதங்கள் கொஞ்சிய சிறு சதங்கை, கிண்கிணி, இலகு தண்டையம் புண்டரி கம் (திருப். 1219), நாத சதகோடி மறை ஒலிடும் நூபுரம் -திருப்.703 என்கின்றர். 6. அருணகிரியார் தாளச் செல்வர் தாள பேத வகைகளையும் அவைதம் நுணுக்கங்களை யும் காணவேண்டில் திருப்புகழிற் காண்க எனத் தாள