இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வீரகாவியம்
132
தந்தை ஒரு நாடாளத் தன்னே ரில்லாத் தனயனுெரு நாடாளப் பாரில் எங்கும் எந்த ஒரு பக்ையுமிலை என்று போற்ற
இருகதிர்போல் ஒளிசெய்ய ஆட்சி செய்வோம்; முந்தைவரு மன்னரெலாம் விண்மீன் போல
மொய்த்திருந்து பணிசெய்ய உலகம் எங்கள் சிந்தை தரும் குறிப்புணர்ந்தே இயங்கக் காண்பேன்
சீரெல்லாங் குவிந்தொன்ருய் வயங்கக் காண்பேன். 266
இன்றே நான் என்பணியைத் தொடங்கு கின்றேன்
ஏற்றதொரு வயப்புரவி எனக்கு வேண்டும்; குன்றேபோல் களிறனைய வலியும் பெற்றுக் கோளரியை விஞ்சுகின்ற வீரங் கொண்டு நின்றேறிப் பாய்புலிபோற் பாய்ந்து செல்லும்
நீர்மையெலாம் அப்பரிபெற் றிலங்க வேண்டும்; சென்றே நான் வென்றிகொளச் சிந்தை கொண்ட
செயலெல்லாம் நிறைவுபெற வேண்டும்' என்ருன் 267