பக்கம்:வீர காவியம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

130


இயல் 56 படைதிரட்டி மூவகத்தை வெற்றி கொள்வேன் பரியொன்று வேண்டுமென மைந்தன் கேட்டான். "என்மதலாய்! உனையொன்று வேண்டு கின்றேன்; இவ்வுண்மை தனை எவரும் உணரா வண்ணம் நின்மனமாம் சிறையகத்து வைக்க வேண்டும்; நின்னையும் நான் பிரிந்திருக்கச் சிறிதும் ஒவ்வேன்; வன்மனங்கொள் கனகனுக்கும் நின் தந் தைக்கும் வளர்ந்துவரும் குலப்பகைமை நெடுநா ளுண்டு; நன்மையிலான் பழிவாங்க நினைத்தல் கூடும்; நாடோறும் விழிப்புணர்வே டிருத்தல் வேண்டும். 261 இவ்வண்ணம் முன்னிகழ்ச்சி அனைத்துஞ் சொன்ன ஏந்திழையாள் திருவடிக்கு வணக்கஞ் செய்து, மெய்வண்ணம் என் வரலா றுரைத்த அன்குய்! மேவலர் தாம் நமக்கினிமேல் எவரு மில்லை; கைவண்ணங் காட்டிடுவேன்; தந்தை போலக் களங்களெலாம் போய்ப்புகுந்து வெற்றி கொள்வேன்; செய்வண்ணம் அறிந்துலகம் புகழும் போது தெரியாமல் என்னிலைதான் மறைந்தா போகும்? 262

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/133&oldid=911225" இலிருந்து மீள்விக்கப்பட்டது