பக்கம்:வெள்ளை யானை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93 வெள்ளை யானை


ஆடிக் களித்த மழை,
இம்மழை-
ஒருமுறை பெய்ததும்
விளைச்சல்
ஆயிரத் தெட்டு கழஞ்சு.

கடற்கானலில்-
கோவலன் மீது பொழிந்த
இந்த யாழ் மழை
புயலோடு-
புரண்டடித்த காரணத்தால்
கோவலன் மாளிகை சரிந்தது.

அவனை அகதியாக்கி
அக்கரைச் சீமைக்கும்
அனுப்பி வைத்தது.

அந்த மழை ஏற்படுத்திய
வெள்ளக் காட்டில்
எஞ்சி நின்றது
ஒரே ஒரு தீவு!
மணிமேகலைத் தீவு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/83&oldid=1312857" இலிருந்து மீள்விக்கப்பட்டது