இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
93 வெள்ளை யானை
ஆடிக் களித்த மழை,
இம்மழை-
ஒருமுறை பெய்ததும்
விளைச்சல்
ஆயிரத் தெட்டு கழஞ்சு.
கடற்கானலில்-
கோவலன் மீது பொழிந்த
இந்த யாழ் மழை
புயலோடு-
புரண்டடித்த காரணத்தால்
கோவலன் மாளிகை சரிந்தது.
அவனை அகதியாக்கி
அக்கரைச் சீமைக்கும்
அனுப்பி வைத்தது.
அந்த மழை ஏற்படுத்திய
வெள்ளக் காட்டில்
எஞ்சி நின்றது
ஒரே ஒரு தீவு!
மணிமேகலைத் தீவு!