இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தவறான கொள்கைகள்
அறிவின் சிகரத்தை அடைந்திருந்த தீர்க்கதரிசிகள் அறிவுறுத்திய கொள்கைகள் தம் ஆழ்ந்த கருத்துக்களால் மக்களின் உள்ளங்களைக் கவர்ந்திருந்தன. அந்த ஞானிகளைச் சாதாரண மக்கள் மானிட நிலைக்கு மேம்பட்ட தெய்வ அம்சங்களாகவே கருதி வருவதைக் கொண்டு அவர்களுடைய அறிவுரைகளின் மகிமையை உணரலாகும். வெறும் மிருக வாழ்க்கையில் நம்பிக்கையுள்ளவர்கள், இதையே காரணமாகக் கொண்டு, இந்தப் போதனைகள் தவறானவை, காலங் கடந்தவை என்று வாதிக்கின்றனர்.
அரிஸ்டாட்டல்,[1] பேகன்,[2] காம்டே[3] முதலிய தத்துவ நூலாசிரியர்களின் கொள்கைகள் முக்கிய