பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82சீவக சிந்தாமணி



பாராட்டியவன் என்பதைப் பின்னால் கேட்டு அறிந்து கொண்டாள்.

யானையோடு அவன் போராடிக் கொண்டிருந்த அந்தச் சில நிமிடங்கள் அவளுக்கு உயிர் போய் வந்து கொண்டிருந்தது.

இதய அறுவைச் சிகிச்சை நடக்கும்போது என்ன ஆகுமோ என்று வெளியே காத்துக் கிடக்கும் உறவினராக அவள் ஆனாள்.

அந்த யானை அடக்கப்பட்டது. அது பிரம்படிக்கு அஞ்சும் பள்ளி மாணவனைப் போல மண்டியிட்டது. அங்குசம் கொண்டு அதனை அடக்கி வைத்தான். பாகர்கள் ஒதுங்கி நின்றனர்.

வீட்டில் அடங்காத பிள்ளையை ஊரார் அடக்கியதைக் கண்டு அவர்கள் உள்ளுக்குள் மகிழ்ந்தனர். அவள் எண்ணிப்பார்த்தாள்; சுரமஞ்சரி இந்த விபத்தில் சிக்கி இருந்தால் அவள் அதிருஷ்டக் காரியாகி விட்டு இருப்பாள்; அந்த வாய்ப்புத் தனக்குக் கிடைத்ததே என்று மகிழ்ந்தாள்.

தன் உடம்பெல்லாம் உராசிக் கிடந்தது. அதில் வெளியிட்ட குருதிச் சிதறல் அவளுக்கு வீரன் தன் மார்பில் காணும் வடுவாகக் கொண்டு மகிழ்ந்தாள்.

அவன் தன்னை இட்டு இழுத்தபோது அவள் துவண்டு விழுந்தாள்; அவன் கட்டி அணைத்திருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணி ஏங்கினாள்.

தோழியர் வந்து சூழ்ந்தனர்; அவள் வடுக்கண்டு துயரத்தில் ஆழ்ந்தனர்.

“சொன்னால் கேட்டாயா? தனியாகப் போகக் கூடாது என்று சொன்னேனே” என்று அம்மா பழைய பல்லவியைப் பாடினாள்.