பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144சீவக சிந்தாமணி



விடை கொடுத்தனுப்பும்போது புதுச் சட்டை போட்டுக் கொண்டிருந்தான்.

“என்னடா புதுச்சட்டை?” என்று அவன் தந்தை கேட்டார்.

“மைத்துனரை வழி அனுப்புகிறேன்” என்றான்.

“பிரிவதில் கலக்கம். வீரன் மனைவி என்பதில் ஒரு விளக்கம், அவள் நிலை அந்தச் சூழ்நிலையில் மிக உயர்ந்து விட்டது. அவன் நினைவு வரும்போதெல்லாம் அந்தப் பூஞ் சோலைக்குச் சென்று அங்கு மகிழ்ந்து குலவி இருந்த பழைய நாட்களை எண்ணி மகிழ்ந்தாள். அந்தச் சோலை அவளுக்கு ஒரு சித்திரமாகத் தெரிந்தது; விரைவில் அவனைச் சந்திப்போம் என்ற நம்பிக்கையே அதற்குக் காரணம். கவிஞர்களை வைத்துச் சோகக்குரல் எழுப்ப முடியாத நிலையில் மிகவும் தெம்போடு இருந்தாள்.


8. விமலையார் இலம்பகம்

தோள் மேல் தோள் வைத்துத் தோழனாகப் பழகியவனிடம் இப்பொழுது தம்மை அறியாமல் ஆண்டான் அடிமை என்ற முதலாளித்துவத் தொழிலாளி உறவு அமைந்தது. தெய்வமும் அடியாரும் என்ற நிலை என்று சொன்னால் ஓரளவு அதை உயர்த்தியதாக அமையும். ‘தலைவரே’ என்று புதிய அரசியல் மொழியில் சொன்னால் அதைவிடப் பொருத்தமாக அமையும். ‘அண்ணாச்சி’ என்று இதுவரை அழைத்து வந்தவனை என்னாச்சு என்று கேட்க முடியாமல் கண்ணியத்தோடு பழக வேண்டி நேர்ந்தது. அது அவனுக்குத் தலைவலியாக இருந்தது.

அவனுக்கு வாள் பாய்ச்சமுடியாத கவசம் மாட்டினர். ஏனெனில் அது தற்காப்புக்குத் தேவை என்பதால். கருங்கல் என்று நினைத்து வந்தது வைரக் கல்லாக