இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
73⚬வெள்ளை யானை
பாதுகை:
(மெதுவாகச் சிரித்துவிட்டு)
ஓ! அதைச் சொல்கிறாயா?
இராமன் காட்டுக்குப் போக,
தசரதன் இறக்க,
பரதன் அரசைத் துறக்க,
அப்போது எதிர்பாராமல் வீசிய
புதிய அலை என்னை-
அரியாசனத்தில் அமர்த்திவிட்டது.
அரியாசனத்துக்கும்
அலைக்கும்
எப்போதும் தொடர்புண்டு.
சிலம்பு:
இந்த நாளில்
ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து
ஆட்சிப் பீடத்தில்
அமர்ந்திருப்பதே
பெரிய சாதனையாகக்
கருதப்படுகிறது.
நீ எப்படிப்
பன்னிரண்டு ஆண்டுகள்
அரசோச்சினாய்?
பாதுகை:
அன்று -
ஊழலுமில்லை;