பக்கம்:வெள்ளை யானை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73⚬வெள்ளை யானை


பாதுகை:

(மெதுவாகச் சிரித்துவிட்டு)
ஓ! அதைச் சொல்கிறாயா?
இராமன் காட்டுக்குப் போக,
தசரதன் இறக்க,
பரதன் அரசைத் துறக்க,
அப்போது எதிர்பாராமல் வீசிய
புதிய அலை என்னை-
அரியாசனத்தில் அமர்த்திவிட்டது.
அரியாசனத்துக்கும்
அலைக்கும்
எப்போதும் தொடர்புண்டு.

சிலம்பு:

இந்த நாளில்
ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து
ஆட்சிப் பீடத்தில்
அமர்ந்திருப்பதே
பெரிய சாதனையாகக்
கருதப்படுகிறது.
நீ எப்படிப்
பன்னிரண்டு ஆண்டுகள்
அரசோச்சினாய்?

பாதுகை:

அன்று -
ஊழலுமில்லை;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/63&oldid=1312595" இலிருந்து மீள்விக்கப்பட்டது