பக்கம்:வெள்ளை யானை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27 வெள்ளை யானை

அவள் முகத்தின் அருகில்
கெளதமன் முகம்.
ஆம்...
இன்று அவளுக்கு
முதலிரவு!

உடம்பு வலியும்
அசதியும் தாலாட்டக்
காலை நேரக்
கங்கை வெள்ளத்தில்
நீண்ட நேரம்
கண்மூடிக் கிடந்தாள்
அகலிகை.
கொள்ளிக் கட்டையைக்
கீழே இழுத்ததும்
கொதிநிலை
குறைவதுபோல்
கொஞ்சங் கொஞ்சமாக
அவளும் -
அமைதி நிலைக்கு வந்தாள்.

கதிரவன்
கிழக்கில் கண்விழித்ததும்
பனிமூட்டத் தோடு
இவள்
மனமூட்டமும் விலகியது.

ரிஷிபத்தினியின்
கடமைகள்
குலுக்கிப் போட்ட சோழிகளாய்
மல்லாந்து விழுந்து
இவளெதிரில் சிரித்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/17&oldid=1310311" இலிருந்து மீள்விக்கப்பட்டது