பக்கம்:வெள்ளை யானை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2.பருவ மழை


மாதவி-
கோவலனின்
வாலிபப் பருவத்தில்
வந்த மழை.

ஊடலும் கூடலும் உணர்ந்து
அவன் உணர்ச்சிகளைப்
புரிந்து கொண்டு
பருவ மறிந்து
விட்டு விட்டுப் பெய்தமழை.

இறங்கும் போதே
காவிரிப்பூம் பட்டினத்தில்
மின்னி இடித்து
மேடையில் இறங்கிய மழை.

இம்மழை-
கோவலனுக்கு இசை மழை.
பல்லியப் பாட்டுக்கு
அபிநயம் பிடித்த
பரத மழை.
அகக் கூத்தும் புறக்கூத்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/82&oldid=1310386" இலிருந்து மீள்விக்கப்பட்டது