இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2.பருவ மழை
மாதவி-
கோவலனின்
வாலிபப் பருவத்தில்
வந்த மழை.
ஊடலும் கூடலும் உணர்ந்து
அவன் உணர்ச்சிகளைப்
புரிந்து கொண்டு
பருவ மறிந்து
விட்டு விட்டுப் பெய்தமழை.
இறங்கும் போதே
காவிரிப்பூம் பட்டினத்தில்
மின்னி இடித்து
மேடையில் இறங்கிய மழை.
இம்மழை-
கோவலனுக்கு இசை மழை.
பல்லியப் பாட்டுக்கு
அபிநயம் பிடித்த
பரத மழை.
அகக் கூத்தும் புறக்கூத்தும்