பக்கம்:வெள்ளை யானை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருட்சோதி


இருட்டில் தான்
துல்லியமாக
என்னை நான்
பார்க்க முடிகிறது.

விடியலுக்குக்
காத்திருக்கும்
என் -
அரும்புகள் எல்லாம்
இருட்டில்தான்
மலர்கின்றன.

இருட்டில் என் வலிமை
யானையின்
மத்தகத்தையும் பிளந்துவிடும்
வெளிச்சத்தில் -
வெள்ளாடாகி விடும்.

கர்ப்பக்கிரக
இருட்டில் இருப்பதால்தான்
கடவுளுக்கே மரியாதை
எனக்கு -
அமைதி தேவைப்படும்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/42&oldid=1310953" இலிருந்து மீள்விக்கப்பட்டது