இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இருட்சோதி
இருட்டில் தான்
துல்லியமாக
என்னை நான்
பார்க்க முடிகிறது.
விடியலுக்குக்
காத்திருக்கும்
என் -
அரும்புகள் எல்லாம்
இருட்டில்தான்
மலர்கின்றன.
இருட்டில் என் வலிமை
யானையின்
மத்தகத்தையும் பிளந்துவிடும்
வெளிச்சத்தில் -
வெள்ளாடாகி விடும்.
கர்ப்பக்கிரக
இருட்டில் இருப்பதால்தான்
கடவுளுக்கே மரியாதை
எனக்கு -
அமைதி தேவைப்படும்போது