இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மாயையின் கருப்பை
போதும்!
போதும்!!
உன்னை நீ
எப்போது
மூடிக் கொள்ளப் போகிறாய்?
அயோத்தி!
ஆமதாபாத்!
பம்பாய் !
சென்னை:
கோவை!
திருநெல்வேலி!
ஒவ்வொரு யாமத்திலும்
உருமாறி உருமாறி
அணை திறந்த வெள்ளமாய்
அரக்கக் குழந்தைகளை
அவிழ்த்து விட்டது போதும்!
இந்தப் சூரபதுமர்களை
இனி நாடு தாங்காது.
உன்னை நீ -
எப்போது மூடிக் கொள்ளப் போகிறாய்?
பிரம்மாக்களின்
பிள்ளைகளாகப் பிறந்து