இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1.மழை
வானம் வரம்.
ஆகாய அமிழ்து.
தரைக் குழந்தையின் தாய்ப்பால்.
விண்வெளியில்
ஓடிக் களைத்த மேகங்கள்
வழித்தெறிந்த வியர்வை.
பரந்த கடலும்
விரிந்த வானும்
செய்து கொண்டிருக்கும்
பண்டமாற்று வாணிபம்.
மண்ணை-
மணந்து கொண்ட குடியானவனுக்கு
மழை,
வானம் வழங்கும் வரிசை:
பேழைப் பணம்.
காதலன் வரவுக்காகக்
காத்திருந்து ஏங்கும்
நட்சத்திரப் பெண்களின்
கன்னத்தில் வழியும்
கண்ணீர்த் துளிகள்.