பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82


யாகவும் நானே காட்டப்படுவதால் இயற்கையில் மென்மை எனது பிறப்புரிமை என்பதை உணரவேண்டும். அஃது என்ன பிறப்புரிமை? எனது பிறப்பு முதல் இறப்பு வரை என்னுடன் இணைந்து நிற்பது மென்மை. பிறவற்றின் மென்மை இடம் மாறலாம்; தடம் பிறழலாம். எனது தோற்ற நிலை முதல் ஈற்று நிலை வரை ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் மென்மை என்னுடன் ஒட்டி இழைந்து நிற்பது. இதனைக் காட்டும் இலக்கிய அடுக்கு இதோ : 'மீன்கண்டன்ன மெல் அரும்பு ஊழ்த்த'8 ே "மென் முகை' - குறுந்தொகை 234. "மென் பொகுட்டு’ - பரிபாடல் : 11 "மெல் இதழ்’ - நற்றினை : 18. மென் தோடு' - நற்றிணை 400 மென் மலர்' - கலித்தொகை : 1.03. "மென்பதப் புது வி’ - அகநானூறு : 74. "மென்பூஞ் செம்மல்" - மதுரைக் காஞ்சி : 685. :மென் பூ வாகை' - அகநானூறு : 136. 'நன்னர் மெல் இணர்' - மலைபடுகடாம் : 428. மென்மையிலும் நொய்மை 'துய் எனப்படும். பஞ்சினும் மென்மை துய் என்பது. இந்தத் துய்’யும் எனக்குரியது. காண்க : 'துய்ம் மலர் உதிர' - குறுந்தொகை : 1.10. 'துய் வி வாகை' - பதிற்றுப்பத்து : 43, யாவற்றிற்கும் மேலாக எனது மென்மைக்கு மணிமுடி இறைவனால் கிடைக்கின்றது. இறைவன் எட்டு குணங்களின் கூட்டு உருவகம், அதனால் 'எண் குணத்தான்' எனப்பட்டான். எண் குணங்களுள் ஒன்று மென்மைத் தன்மை. அம்மென்மையான எனது இதழ்களின்மேல் அடிவைத்து நடப்பதால் : மலர்மிசை ஏகினான் மாணடி" - (குறள் : 3) 88 அகம்: 10 : 2