98
பூப்பேன். (சங்கத்து அகர முதலியில் நிலப்பாகல் கொடியாகக் கூறப்படும்) நிலவாகை என்னும் புதர் ஆவிரையாக நிலத்தில் பூப்பேன். தாழையாக நீர்த்தண்டில் பூப்பேன்.
இவ்வாறாக இங்குக் காட்டப்பட்டுள்ள என்னினத்தாரைக் கொண்டே நான்,
1. மரத்தின், செடியின்
கிளையில் - கோட்டில் கோட்டுப் பூ.
2. கொடியில் கொடிப் பூ , 3, நிலத்தின் குத்துக் குத்தான
புதரில் நிலப் பூ, 4. நீரில் நீர்ப் பூ -என, எனது
குடும்பம் நான்கு வகையானதாகும்.
இக்குடும்பப் பகுப்பை,
'கோட்டினும் கொடியினும் நீரினும் நிவத்தினும்
காட்டிய யூ” 45 -எணஇளங்கோவடிகளார் எழுதினார், இதனைப் பிங்கல நிகண்டு,
'கோட்டுப் பூ கொடிப்பூ நீர்ப்பூ வோடு
புதர்ப்பூ என்றிவை நால்வகைப் பூவே'14 -எனக் காட்டியது. இதில் நிலப்பூ புதர்ப்பூவாகக் கூறப்பட்டுள்ளது. நிலப்பூ நிலத்திற் பரவிக் குத்தாகவும் புதராகவும் உள்ளது என அறியலாம். சேக்கிழாரும் இவ்வரிசையில் ஒன்றை மாற்றியமைத்து
'கோட்டு மலரும் நிலமலரும் குளிர்நீர் மலரும் கொழுங்கொடியின்
தோட்டு மலரும்' T4 என்றார்.
'மனங்கொள் கொடிப்பூ முதல்நான்கு
வகைப்பூ வடிவில் வயங்குகின்ற 148 என வள்ளலாரும் நான்கு வகைக்கு முத்திரையிட்டார்.
'நந்தவனம் கண் திறந்து நாலு வகைப் பூவெடுத்து,
பூவெடுத்துப் பூசைசெய்யும் புண்ணியவான் போனாரோ'149
-என பிணப்பாட்டாம் அழுகையிலும்
14.5 சிலம்பு ; அழற்படு காதை 98,94 148 திரு. அ. சிற்சக்தி துதி: ே
146 பிங், நி : 875 149 நாட்டுப் பாடல், 147 பெரி. பு : முருக : 8. r so