இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
போதியும் புத்தனும்
போதிமரம்
பெரு மூச்சுவிட்டது.
புத்தன்
நிமிர்ந்து
பார்த்தான்.
'ஆயிரக் கணக்கான
தாவரங்கள்
என்னடியில்
மக்கி எருவாகி
நான் மரமானேன்'
என்று புலம்பியது.
'இருபத்துநாலு புத்தர்கள்
என்னுள் மரித்திருக்கின்றனர்.
நான்-
இருபத்தைந்தாவது புத்தன்!'
என்று கூறிப்
பெருமூச்சு விட்டான் கெளதமன்.
★ ★ ★