பக்கம்:வெள்ளை யானை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போதியும் புத்தனும்


போதிமரம்
பெரு மூச்சுவிட்டது.
புத்தன்
நிமிர்ந்து
பார்த்தான்.

'ஆயிரக் கணக்கான
தாவரங்கள்
என்னடியில்
மக்கி எருவாகி
நான் மரமானேன்'
என்று புலம்பியது.

'இருபத்துநாலு புத்தர்கள்
என்னுள் மரித்திருக்கின்றனர்.
நான்-
இருபத்தைந்தாவது புத்தன்!'
என்று கூறிப்
பெருமூச்சு விட்டான் கெளதமன்.

★ ★ ★

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/65&oldid=1312601" இலிருந்து மீள்விக்கப்பட்டது