பக்கம்:வெள்ளை யானை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மீண்டும் அந்தக் காந்த இசை!


சபர்மதி வீணையை
அந்த
அகிம்சை விரல்கள்
சுருதி குலையாமல்
மீட்டிய போது
இராக தேவதை
அருவியாக இறங்கி வந்தாள்.

ததீசி முனிவரைப்போல்
தண்டு வடத்தை
வெட்டியெடுத்து,
அதன்-
மூலநரம்புகளை உருவித்
தியாகத் தீயில்
வாட்டிப் பதமாக்கி -

இதயத்தில் அடித்த ஆணிகளில்
இறுக்கிக் கட்டி
இந்தியரின்
சோகராகத்தை
அவன் மீட்டினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/59&oldid=1311105" இலிருந்து மீள்விக்கப்பட்டது