பக்கம்:வெள்ளை யானை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளை யானை

 

'அகல்யா' என்ற சொல்லுக்கு 'அழகில் குறைவற்றவள்' என்று பொருள். முதன்முதலில் தோன்றிய வால்மீகி இராமாயணக் கதாபாத்திரமான அகல்யா, தோண்டத் தோண்ட வற்றாத ஒரு காதற் சுரங்கம். வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார், ச.து.க. யோகி இருவரும் இதைக் காப்பியமாக்கினர். புதுமைப்பித்தன் வெங்கட்ராமன் போன்ற மேதைகள் அழகிய சிறுகதை ஆக்கினர், பிரபஞ்சன் குறுநாடகமாக வடித்தார். கோவை ஞானி அரசியல் கோணத்தில் புதுக்கவிதை ஆக்கினார்.

நான் அகல்யாவை மீமெய்ம்மைப் பாத்திரமாகச் (Surrealistic Character) சித்தரித்துள்ளேன். இளமையில் அகல்யாவின் அடிமனத்தில் ஏற்பட்ட ஏக்கங்களும், ஏமாற்றங்களுமே அவள் வாழ்க்கையின் பின்விளைவுகளாக உருப்பெற்றன என்பது இக்காப்பியத்தின் அடிப்படை. நசுக்கப்பட்ட பெண்ணியம் தன் விலங்கொடித்துக் குமுறியெழும் சீற்றத்தை இக்காப்பியத்தில் காணலாம்.

“Surrealisin is irrational,
illogical, disruptive and
subversive”

 
முருகுசுந்தரம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/5&oldid=1396134" இலிருந்து மீள்விக்கப்பட்டது