பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/640

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

620


க்ரும்பிமிர் தாதொடு தலைத்தலை மிகூஉ நரந்த நறுமலர்' " - என்றார் நல்லழிசியார். நரந்த் மரம் வேங்கை மரத்தண்டையில் பெரிதும் வளரும் போலும். செறிந்த மரங்களைக்கொண்ட பெரிய காவில் வேங் ைகமரத்து மலர்கள் உதிர்ந்து கிடப்பவனவற்றுடன் நரந்தம் பூவும் உதிர்ந்து பரவிக் கிடக்கும் 2 一- 6了岔T மையோடக் கோவனார் என்பார் பாடியுள்ளார். நக்கீரரும் 'புலிக்கேழ் உற்ற பூவிடை (வேங்கைப் பூவிடையே) பெருஞ்சினை நரந்த நறும்பூ நாள்மலர் உதிர' - என்று வேங்கையுடன் காட்டினார். இத்தொடர்புகளால், நரந்தம் பூ, கோட்டுப் பூ எனவும் குறிஞ்சி நிலப் பூ எனவும், வேங்கை மலரும் கார்காலத்தில் மலர்வது எனவும் பெருந்துகின்றது. இப் பூ வெண்மை நிறங்கொண்டது. ஓரளவில் முல்லைப்பூ போன்று மனந்தருவது. இதன் மணத்தால் "நறும்பூ,' "நாறு நரந்தை" என்றெல்லாம் சிறப்பிக்கப்பட்டுள்ளது. அதியமான் நெடுமான் அஞ்சி, "தான் காதலிப்பார்க்கு (அன்புடையார்க்கு) மாலை சூட்டுத லான் நரந்தம் பூ நாறும் கைகளை உடையவன் : எனப்பட்டான், இக் கையால் தன் தலையை நீவி அன்புகாட்டியதை அவ்வையார். நரந்தம் நாறும் தன்கையால் புலவு நாறும் என்தலை தைவருமன்னே' 5 - என்று பாடினார். இப்பூவை மகளிர் கூந்தலில் சூடுவர். "நரந்தம் நாறும் குவையிருங்கூந்தல்' என்னும் தொடர் ஒரெழுத்தும் மாருமல் பரணராலும், பனம்பாரனாராலும் பாடப் பட்டுள்ளது. ஒரு தலைவன் காதலியுடன் குலவும்போது கூந்தலி லிருந்து நரந்தங்கோதையை விரலால் சுற்றி மணம்பெற்ற விரலை மோந்து மகிழ்ந்தானாம். 8 1. பரி 416 : 14 : 16 2 பரி 7 ; 11 18, 8 அகம் : 141 25, 26, 4. புறம் : 286 பழைய டிரை, புற்ம் : 235 : 8, 9, அகம் : 268 : 4, குறு : 52 : 8. கலி 54 : டி 1,