வீரகாவியம் 62
நாளுக்கு நாளுன்னை நினைந்தி ரங்கி
நான் மெலிந்து வாழ்ந்திருந்தேன்; வாடும் என்றன் தோளுக்குத் தோள் கொடுக்க வந்து நின்ருய்!
துணைவிஎன உரியமணங் கொள்க’ என்ருள்: வாளுக்கும் வேலுக்கும் தோற்ற தில்லை
வட்கார்தம் வில்லுக்குந் தோற்ற தில்லை நிளக்கண் வேலுக்குத் தோற்று விட்டேன்
நீயுரைத்த சொல்லுக்குந் தோற்றேன்' என்ருன் 112
வேல்விழியென் றுணக்கிட்ட பெயர்பொ. ருந்தும்
வெலற்கரிய எனை வென்ற கார ணத்தால்: சேல் விழிநின் துனையின்றி உலக மில்லை செந்தமிழே நீயின்றி வாழ்வே யில்லை; நூல்புரைமெல் லிடையணங்கே எனக்கு நின்னை நுந்தை தர உடன் படுமோ? விழையும் எற்குப் பால்வழியும் மொழிபுகலும் நின்னை என்பால்
பரிந்தளித்தால் அவனை என் வாய் வாழ்த்தி நிற்கும். 113
மாவேழன் எவர்பாலும் கெஞ்சி நின்று
மனம் விட்டுப் பொருளொன்று கேட்ட தில்லை; பூவேறும் தாழ்குழலி நின்ம னத்தின்
பொருட்டாக நுந்தையின்பால் இரந்து நிற்பேன்; கோவேலன் மறுத்துரைப்பின் போரே மூளும்;
குமுறிஎழும் வீரத்தால் மணமே சூழும்: நாவிறு வஞ்சினத்து மொழியாக் கொள்க!
நாளைக்கு முடிவொன்று காண்பேன்’ என்ருன். 114
வட்கார் - பகைவர்,