பக்கம்:வீர காவியம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம் 62


நாளுக்கு நாளுன்னை நினைந்தி ரங்கி நான் மெலிந்து வாழ்ந்திருந்தேன்; வாடும் என்றன் தோளுக்குத் தோள் கொடுக்க வந்து நின்ருய்! துணைவிஎன உரியமணங் கொள்க’ என்ருள்: வாளுக்கும் வேலுக்கும் தோற்ற தில்லை வட்கார்தம் வில்லுக்குந் தோற்ற தில்லை நிளக்கண் வேலுக்குத் தோற்று விட்டேன் நீயுரைத்த சொல்லுக்குந் தோற்றேன்' என்ருன் 112 வேல்விழியென் றுணக்கிட்ட பெயர்பொ. ருந்தும் வெலற்கரிய எனை வென்ற கார ணத்தால்: சேல் விழிநின் துனையின்றி உலக மில்லை செந்தமிழே நீயின்றி வாழ்வே யில்லை; நூல்புரைமெல் லிடையணங்கே எனக்கு நின்னை நுந்தை தர உடன் படுமோ? விழையும் எற்குப் பால்வழியும் மொழிபுகலும் நின்னை என்பால் பரிந்தளித்தால் அவனை என் வாய் வாழ்த்தி நிற்கும். 113 மாவேழன் எவர்பாலும் கெஞ்சி நின்று மனம் விட்டுப் பொருளொன்று கேட்ட தில்லை; பூவேறும் தாழ்குழலி நின்ம னத்தின் பொருட்டாக நுந்தையின்பால் இரந்து நிற்பேன்; கோவேலன் மறுத்துரைப்பின் போரே மூளும்; குமுறிஎழும் வீரத்தால் மணமே சூழும்: நாவிறு வஞ்சினத்து மொழியாக் கொள்க! நாளைக்கு முடிவொன்று காண்பேன்’ என்ருன். 114 வட்கார் - பகைவர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/65&oldid=911566" இலிருந்து மீள்விக்கப்பட்டது