பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

தேமாங்கனிசிதறி வாழைப்
பழங்கள் சிந்தும்
ஏமாங் கதமென் றிசையால்
திசைபோய துண்டே."

என்று மர வளத்தைப் பாடிக் களிக்கிறார் ?

மரம் செடி வளர்ப்போடு விளைவினை விருத்தி செய்து நாட்டில் பசியை நாடவொட்டாது செய்வதும் மக்கள் கடமையாகும். கடமைப் பண்பை மேற் கொண்ட போது ஒற்றுமைக் குணமும் ஓங்க வழி ஏற் டுகிறது. உயர்திணைப் பொருள்கள்பால் இப்பண் பாடுகள் ஒருங்கே அமையின், அஃறிணைகளிடத்தும் அமைந்து காணப்படும்.என்பதை நாம் எதிர் பார்க்க லாம். இஃது உண்மை என்பதைத் தேவர் உழவு மாடுகளின் மூலம் உணர்த்துகிறார். விளைவுக்கு உறுதுணையாய் இருப்பன அவையே அல்லவா? கடமைப் பண்பை உணர்ந்தவர் காளைகளைக் கண்ணுங் கருத்துமாய்ப் பேணுவர் என்பதைக் கழறவும்வேண்டுமோ? உழுகின்ற எருதுகள் சூம்பற் காளைகளாயும், சோம்பற்காளைகளாயும், ஒற்றுமை அற்றனவாயும் இருப்பின், உழவும் இயலாது; விளைவும் பல்காது. இவை இரண்டும் நடவா எனில், "பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க", என்னும் முது மொழியும் பாழ்படும் 'மாடு' என்னும் சொல்லும் 'செல்வம் ” என்னும் பொருளை இழந்து நிற்கும். ஒற்றுமைப் பண்புடையனவாய் இருத்திலை வற்புறுத்தவே தேவர்,

‘’மாமனும் மருகனும் போலும் அன்பின,
காமனும் சாமனும் கலந்த காட்சிய,
பூமனும் அரிசிப் புல்.ஆர்ந்த மோட்டின
தாமினம் அமைந்துதம் தொழிலின் மிக்கவே‘’

என்று கூறிக் களிக்கின்றார். நாட்டிற்கு இத்தகைய காளைகள் தேவை என்பதைச் சுட்டிக் களிக்கின்றார்!