பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



11. வீரமா முனிவர்

தமிழ் மொழிக்கு அரும்பெருந்தொண்டு செய்தவர்கள் பல சமயத்தவர்கள் என்பதை நாம் நன்கு அறிந்துளோம். அவர்களுள் முஸ்லீம் சமயத்தவர்கள் செய்ததொண்டினை இதற்கு முன் உள்ள கட்டுரை வாயிலாக நன்கு அறிந்தோம். அவர்களைப் போலவே கிறிஸ்தவச் சமயத்தவர்களும் பல அரிய தமிழ்ப் பணியினைச் செய்துள்ளனர். அவர்களுள் ஈண்டு ரெவரெண்ட் பெஸ்கி என்னும் கிறிஸ்தவத் தமிழ் அறிஞரைக் குறித்துச் சிறிது சிந்திப்போமாக. இவரே வீரமாமுனிவர்ஆவார்.

ரெவரெண்டு பெஸ்கி அவர்கள் இத்தாலி தேசத்தில், வெனிஸ் நகரில் கி. பி. 8-11-1680-ஆம் தேதியில் பிறந்தார். பெற்றோர்கள் இவரது பிறப்பால் பெரிதும் களித்தனர்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த இவர், தம் மழலைச் சொற்களினால் தாய் தந்தையரைக் களிப்பெனுங் கடலில் ஆழ்த்தி இன்புறச் செய்தார். இவர், தம் இளமைப் பருவத்திலிருந்தே கல்வியில் ஊக்கங்காட்டிகன்கு பயின்று வந்ததுடனிற்காமல், மக்களின் துன்பங்களுக்காகத் தம்மையே, பாவிகளிடம் ஒப்புவித்துச் சிறையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்துவிடம் அளவற்ற அன்புகொண்டு அவருடைய அன்புரைகளைப் போற்றித் துதித்தும் வந்தார். இவர்ரோமன் கல்லூரியில் கல்வியைத் திறம்படக் கற்றார். கல்லூரியில் பயிலும்போதே, கிறிஸ்துவின் பொன் மொழிகள் இவரது மனத்தில் பசுமரத்தாணி போன்று பதிந்துவிட்ட்ன. எனவே, இவர் இயேசு கிறிஸ்து