இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
106
அறிவுக்
581.விஷயமில்லாத பொழுது விஷயமில்லை என்பதை வெளிக் காட்டாதவன் பாக்கியவான்.
ஜார்ஜ் எலியட்
582.எறும்பைப்போல் உபதேசிப்பவர் யாருமில்லை; ஆனால் எறும்போ பேசுவதே இல்லை.
பிராங்க்ளின்
583.பயனில் சொல்லுக்குப் பொறுப்பாவதுபோல் பயனில் மெளனத்துக்கும் பொறுப்பாவோம்.
பிராங்க்ளின்
584.நா தான் மனிதனிடமுள்ள நல்ல அம்சம்; கெட்ட அம்சமும் அதுவேதான். அது நம் வசமானால் அதைவிட உயர்ந்த பொருளில்லை. நாம் அதன் வசமானால் அதைவிடத் தீய பொருளில்லை.
அனார்காரிஸ்
585.பேச்சு பெரியதே; ஆனால் மெளனம் அதனினும் பெரியதாகும்.
கார்லைல்