பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

அறிவுக்



781.உடைமை என்பது கடனே; செல்வமே சிந்தையின் உரைகல்; பொருள் வைத்திருப்பது பாவம்: அதை வழங்கிய அளவே மன்னிப்பு.

பால் ரிச்சர்ட்

782. பெறுவது போலவே கொடுக்கவும் வேண்டும்—சந்தோஷமாய் விரைவாய், தயக்கமின்றிக், கையைவிட்டுக் கிளம்பாத கொடையால் பயனில்லை.

ஸெனீக்கா

783.பிறர்க்கு வழங்கியதை மறத்தல் பெருந்தன்மை பேசும்.

காங்க்ரீவ்

784.ஈதலாகிய ஆடம்பரத்தை அறிய ஏழையாயிருத்தல் வேண்டும்.

ஜார்ஜ் எலியட்

785.கையில் வைத்துக்கொண்டே இன்று போய் நாளைவா என்று கூறாதே.

விவிலியம்

786.பெரிய கொடையே யாகிலும் அன்பின்றிக் கொடுத்தால் கொடையாகாமல் தேய்ந்து போகும்.

ஷேக்ஸ்பியர்