பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50


4. உடலின் வெப்பநிலையை ஒரே சீராக வைப்பது.
5. வெள்ளணுக்கள் நோய் நுண்ணங்களைக் கொல்வது.

60. சிவப்பு குருதியணுக்கள் என்பவை யாவை?

குருதியிலுள்ளவை. ஈமோகுளோபின் என்னும் இரும்பு ஊட்டம் உள்ளவை. உயிர்வளியைச் சுமந்து செல்பவை.

61. நம் குருதியில் எந்த அளவுக்கு இவை உள்ளன?

ஒரு கன மில்லி மீட்டருக்கு 5 மில்லியன் உள்ளன.

62. இரும்பு ஊட்டம் குறைவதால் உண்டாடும் நோய் யாது?

குருதிச்சோகை.

63. குருதிப்படலம் எதற்குப் பயன்படுகிறது?

குருதியின் இயைபை ஆராய, அதைக் கண்ணாடி வில்லையில் படலமாக எடுத்துச் சாயமேற்றி நுண்ணோக்கியில் பார்க்க.

64. குருதி வகைகள் யாவை?

குருதியில் காணப்படும் எதிர்ப்பிகள், தெளிநீரிலுள்ள எதிர்ப்புப் பொருள்கள் ஆகியவற்றின் அடிப்படையில் குருதி வகைப்படுத்தப்படுகிறது. அதன் வகைகள். A,B,AB,o

65. குருதி வகைப்பாட்டிற்குக் காரணமானவர் யார்?

1900இல் குருதியை வகைப்படுத்தலாம் என லேண்ட் ஸ்டெமினர் கூறினர்.

66. எந்தக் குருதி வகை எல்லோருக்கும் ஏற்றது?

o வகை.

67. அனைத்துத்தருநர் என்றால் என்ன?

o வகைக் குருதியில் எதிர்ப்பிகள் இல்லாததால், இது ஏனைய மூன்று வகைக் குருதியோடும் சேரும். ஆகவே, இக்குருதியிலுள்ளவர் அனைவருக்கும் குருதிக் அளிக்கும் இயல்புடையவர்.

68. ஏ.பி.ஓ. தொகுதி என்றால் என்ன?

இன்றியமையாத குருதித் தொகுதிகளில் ஒன்று.

69. தருநர் என்பவர் யார்?

தன் குருதி அல்லது திசுவை பிறருக்கு அளிப்பவர்.

70. பெறுநர் என்பவர் யார்?