இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
76
புழு, கூட்டுப்புழு, முதிரி என நான்கு பருவங்கள் உண்டு.
294. முற்றிளரி என்றால் என்ன?
- நீரில் வாழ்ந்து செவிள்களால் உயிர்க்கும் நிறைஇளரி. பொதுவாகப் பல பூச்சிவகைகளில் காணப்படுவது.
295. நிறை உயிரி என்றால் என்ன?
- உருமாற்றம் நிறைவடைந்து கூட்டைவிட்டு வெளிவரும் உயிரிகளின் வாழ்க்கைச் சுற்றில் இறுதி நிலையான நான்காம் நிலை. எ-டு தவளை, வண்ணத்துப்பூச்சி.
11. ஐம்பொறிகள்
296. ஐம்பொறிகள் யாவை?
- கண், காது, மெய், வாய், மூக்கு.
297. இவற்றின் புலன்கள் யாவை,
1. கண் | - | பார்த்தல் |
2. காது | - | கேட்டல் |
3. மெய் (தோல்) | - | தொடு உணர்ச்சிகளை அறிய. |
4. வாய் (நாக்கு) | - | சுவையறிதல் |
5. மூக்கு | - | முகர்தல் |
298. இவற்றில் சிறந்த இரண்டு எவை? ஏன்?
- கண், காது. பார்த்தறிதல், கேட்டறிதல் ஆகியவை மூலம் நாம் பெரும் அறிவில் பெரும்பகுதியாகும். பொதுவாக, ஐம்பொறிகள் அறிவு வாயில்கள் என்ப்படும்.
299. கண்ணின் சிறப்பென்ன?
- ஐம்பொறிகளில் இன்றியமையாதது. பொருள்களைப் பார்த்து நம் அறிவைப் பெருக்கிக் கொள்ள உதவுவது.
300. கண்ணிலுள்ள மூன்று படலங்கள் யாவை?
- 1. விழிப்படலம். இது முன்புறம் விழிவெண்படலமாகியுள்ளது.
- 2. விழியடிக் கரும்படலம். இது முன்பக்கம் கருவிழிப் படலமாகியுள்ளது.
- 3. விழித்திரை.
301. விழித்திரையின் சிறப்பென்ன?