பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76


புழு, கூட்டுப்புழு, முதிரி என நான்கு பருவங்கள் உண்டு.

294. முற்றிளரி என்றால் என்ன?

நீரில் வாழ்ந்து செவிள்களால் உயிர்க்கும் நிறைஇளரி. பொதுவாகப் பல பூச்சிவகைகளில் காணப்படுவது.

295. நிறை உயிரி என்றால் என்ன?

உருமாற்றம் நிறைவடைந்து கூட்டைவிட்டு வெளிவரும் உயிரிகளின் வாழ்க்கைச் சுற்றில் இறுதி நிலையான நான்காம் நிலை. எ-டு தவளை, வண்ணத்துப்பூச்சி.

11. ஐம்பொறிகள்

296. ஐம்பொறிகள் யாவை?

கண், காது, மெய், வாய், மூக்கு.

297. இவற்றின் புலன்கள் யாவை,

1. கண் - பார்த்தல்
2. காது - கேட்டல்
3. மெய் (தோல்) - தொடு உணர்ச்சிகளை அறிய.
4. வாய் (நாக்கு) - சுவையறிதல்
5. மூக்கு - முகர்தல்

298. இவற்றில் சிறந்த இரண்டு எவை? ஏன்?

கண், காது. பார்த்தறிதல், கேட்டறிதல் ஆகியவை மூலம் நாம் பெரும் அறிவில் பெரும்பகுதியாகும். பொதுவாக, ஐம்பொறிகள் அறிவு வாயில்கள் என்ப்படும்.

299. கண்ணின் சிறப்பென்ன?

ஐம்பொறிகளில் இன்றியமையாதது. பொருள்களைப் பார்த்து நம் அறிவைப் பெருக்கிக் கொள்ள உதவுவது.

300. கண்ணிலுள்ள மூன்று படலங்கள் யாவை?

1. விழிப்படலம். இது முன்புறம் விழிவெண்படலமாகியுள்ளது.
2. விழியடிக் கரும்படலம். இது முன்பக்கம் கருவிழிப் படலமாகியுள்ளது.
3. விழித்திரை.

301. விழித்திரையின் சிறப்பென்ன?