பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72. அறிவுகால் திரட்.ே

3. திருவள்ளுவமாலை.

இது இரட்டுற மொழிதலால் திருவள்ளுவ நாயனுரையும் அவர் திருவாய் மலர்ந்தருளிய திருக்குறளையும் பற்றிப் புனைக் துரைக்கும் திருப்பாடல்களின் வரிசைஎனப் பொருள்படும். இது சங்கப்புலவர்கள் நாற்பத்தொன்பதின்மரும் அசரீரி, சாமகள், இறையனர், உக்கிரப்பெருவழுதி என்பவர்களும் பாடிய பாடல்க வின் தொகையாகும்.

புலவர் திருவள் ளுவரன்றிப் பூமேல் சிலவர் புலவரெனச் செப்பல்,-சிலவு பிறங்கொளிமா லேக்கும் பெயர், மாலே மற்றுங் கறங்கிருள்மா லைக்கும் பெயர். (10) மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றுார் கிழார், கான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன் தான்்மறைந்து வள்ளுவணுய்த் தக்துரைத்த-நான்முறையை, வந்திக்க, சென்னி. வாய், வாழ்த்துக. நன்னெஞ்சம், சிந்திக்க, கேட்க, செவி. (11) உக்கிாப்பெருவழதி. அறன் அறிந்தேம்; ஆன்ற பொருள் அறிந்தேம்; இன்பின் திறன் அறிந்தேம்; வீடு தெளிந்தேம்;-மறன்எறிந்த வாளார் நெடுமாற வள்ளுவனுர் தம்வாயால், கேளாதனவெல்லாம் கேட்டு. (12) - கொடிஞாழன்மாணிபூதனுர், சிந்தைக்கினிய, செவிக்கினிய, வாய்க்கினிய; வந்த இருவினைக்கு மாமருந்து;-முந்திய நன்னெறி நாம்அறிய காப்புலமை வள்ளுவனர் பன்னிய இன்குறள்வெண் பா. (13) கவுணியனுர்,