பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரை. 8ぎ

6. நாடகத்தால்-வேஷமாத்திாத்தில், வீடு-முத்தி. விரை கின்றேன்-அவசரப்படுகின்றேன். ஆடகம்-பொன். மணிக்குன்று. மாணிக்கமலை. எம் உடையான்-எம்மை அடிமையாக உடைய வனே, எம் என்றது, தன் வம்சத்தோரையும் உளப்படுத்தி,

7. வான்-சுவர்க்க இன்பம். எயும்-பொருக்கிய. எம்மான்எம்பெருமான். என்று என்று-அடுக்குச் சொல்.

8. ஆம் ஆறு-ஈடேறும்படி ஆகும் என்பதன் விகாம், ஆம். துகேன்-பெருக்கிச் சுக் கஞ்செய்ய மாட்டேன். சதுர்-உபாயம்.

9. வளி-காற்று. யான் என்று - தான்்.அல்லாத உடம்பை நான் என அகங்கரித்துச் சொல்லி (அகங்காாங்கொண்டு) எனது என்று-தன்னுடைய கல்லாத செல்வங்களை என்னுடையதென்று (மமகாாங்கொண்டு) சொல்லி,

10. வானவர்கள், வாழ்த்துவதும் தாம் வாழ்வான் - தேவர் கள் உன்னைப் பலவாறு வாழ்த்திக் துதிப்பதும் தாங்கள் நன்கு வாழ் தற்பொருட்டே, மனம் நின்பால் தாழ்த்துவதும்-(அவர்கள்) தங்களது மனத்தை உன்னிடத்துச் செலுத்தித் தியானிப்பதும். தாம் உயர்ந்து-தாங்கள் யாவரினும் உயர்ந்து, தம்மை-தங்களை, எல்லாம் தொழவேண்டி-எல்லா உயிர்களும் வணங்கவேண்டுதற் பொருட்டே. தேவர்கள் உன்னை வாழ்த்துவதும் வணங்குவது மெல்லாம் அரித்தியமாகிய, புகழும் போகமும் பெறுதற்பொருட் டேயாம். நான் பரவுவது பிறவித்துன்பமற்று மீளாநெறியாகிய முத்திநிலை கூடுவதற்கே யாம் என்பது இப்பாட்டின் கருத்தாகக் கொள்க. சூழ்த்து-சூழ்ந்து, வவித்தல் விகாரம். மதுகாம்-வண்டு கள், தேனைச்சேகரிப்பது, காாணப் பெயர். பாழ்த்த-பாழான.

11. வேண்டேன்-விரும்பமாட்டேன். இனி அமையும்-இனி மேல் போதும். குற்முலம்-சித்திரசபையையுடைய ஒர் சிவஸ்தலம். கூத்தா-நடராச குாைகழல்-ஒலிக்கின்ற வீாகண்டை யணிந்த திருவடி கழல், தான்ா யாகு பெயர். கன்று +ஆ= கற்ரு-கன்றை யுடைய பசு. பேரன்புக்குப் பசு கன்றிடத்துக் கொள்ளும் அன் டையே உவமை கூறுதல் வழக்கு "இரண்டுகன்றினுக்கிரங்கு மோரா வென விருந்தான்்’ என்றார் கம்ப காடரும்.