பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 அறிவுநூல் திரட்.ே

பசவியிருந்தனர் என்ற சரித்திரக் கொள்கைபற்றி.........'சகமுழு தும் தினதாயின்’ என்றார்,

வேக வகி-வையையாறு. எடு-திருஞானசம்பந்தர் விட்டதமிழ் வேதமாகிய எடு. காலநதி-காலப்போக்காகிய ஆறு. இதிற் குறித்த வரலாறு பெரியபுராணத்திற் காண்க.

கடையூழிவரும் தனிமை-சர்வசங்கார காலத்துக்குப் பின்பு சிவபெருமான் எகளுயிருக்கும் தனிமை. இவ்வடிகளிற் குறித்த வரலாறு திருவாதஆராகிய மாணிக்கவாசகர் சொல்ல, வேதியர் வடிவுடன் வந்த சிவபெருமான் திருக்கோவையாரையும் திருவாச கத்தையும் எழுதினரென்பது, தக்கவழி-தகுந்தோர் வந்தவிடத்து. வியஞ்சனம்-அடையாளம் - பலகை மெய்ச்சளித வியஞ்சனம் என முடிக்க.

வடமொழி - வீறுடைய-கலைமகள் தன் ......... இம்மூன்று தாழிசையாலும் கூறிய கருத்து:

சரஸ்வதி கிழக்கு நோக்கியிருந்தால் அத்தேவியின் இடக் கண் வடக்கும், வலக்கண் தெற்குமாகப் பொருந்தியிருக்கும். ஆகவே தென்மொழி வடமொழிகளே அத்தேவியின் கண்களாகக் கொள்வோர்க்குத் தென்மொழி வலக் கண்ணும் வடமொழி இடக் கண்ணுமாகும். இதனையறியாது வடமொழியை உயர்த்திப்பேசிக் கெவெழக்குத் தொடர்பவர் கிழக்கு மேற்குத் திசை யறியாத மதி யீனாவர் என்பது.

பத்துப்பாட்டு ஆதி-பத்துப்பாட்டு முதலான சங்க இலக்கி யங்கள். பொருட்கு இசையும் இலக்கணம்இல் கற்பனை-பொருத்த மில்லாத ஆபூத சற்பனை.

மது - ஒர் ஸ்மிருதி.

வாசகம்-திருவாசகம்.கனம்,சடை-வேதத்தை உருவிடும் விகற் பங்கள். மலம்-மும்மலம், "திருவாசகத்துக்குருகாதார் ஒருவாச கத்துக்கும் உருகார்’ என்பதை ஈங்குக் கருதுக. மாண்டோர்கள். மாட்சிமைப்பட்டவர்கள், இதில் மாண், பகுதி.