பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு அடிகளார்
சிந்தனைத் துளிகள்


1. “புதிய கோடியில் பழைய துணியை ஒட்டுப் போட முடியாது” என்ற விவிலிய வாக்கு நினைவிற்கு வருகிறது.

பழைய சமுதாய அமைப்பைச் சீர்திருத்தம் செய்வது என்பது நடைமுறையில் நடக்கக்கூடிய காரியமன்று.

கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்த புரட்சியை தோற்றுவித்துப் பக்குவப்படுத்திய பின்தான் மனிதனுக்கு பூரண சுதந்தரத்தை வழங்க வேண்டும்.

இந்தச் சூழ்நிலையில்தான் மக்களாட்சி பொருளுடையதாக அமையும்”.

2. “தன்னலம் என்பது ஒரு வெறி. பாம்பின் நஞ்சினும் கொடியது. இந்நஞ்சின் வழிப்பட்டவர்கள் பெற்றுள்ள கல்வி, பக்தி-யாவும் பயனற்றவையே”.

3. “பெண்ணிடம் ஆசை கொள்ளுதலும், காதலும் ஒன்றன்று. இவை, தம்முள் முரண்பட்டவை”.

4. “இன்றைய சமுதாயத்திற்குப் பணத்தின்மீது மட்டுமே ஆசை. பணம் கிடைக்கக்கூடிய வழிகளில் அல்ல”.