பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்

27


ஆனால்,'மூங்கில் திரை' என்றும் ஒரு திரை இருப்பதாக யாருமே கேள்விப்பட்டதில்லை. அந்த மூங்கில் திரையோ அரசியல் தொடர்புடையது அல்ல.

இந்த மூங்கில் திரையானது சீனா தேசத்தில் ஒவ்வொரு சைனாக்காரர் வீட்டிலும் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறது.

இந்தத் திரை எதற்காகத் தெரியுமா? வீட்டில் ஆண்கள் இருக்கும் இடத்தையும் பெண்கள் இருக்கும் இடத்தையும் பிரித்துக் காட்டுவதற்காகவே.

அந்த இடத்தை ஆண்கள் எட்டிப்பார்த்தது கூட இல்லை. அந்த வீட்டின் குடும்பத் தலைவன் கூட தன் மனைவி இருக்கும் அறைக்குள் தலையை நீட்டிப்பார்க்கலாமே தவிர, வீட்டில் மற்ற பெண்கள் இருக்கின்ற இடத்தைப் பார்க்கவே முடியாது.

ஒரு சமயம், ஒரு பெண் நோயுற்று விட்டாள். மருத்துவர் அழைத்துவரப்பட்டார். ஆனால் அந்த மருத்துவரோ நோயுற்ற பெண் இருக்கும் இடத்துக்கு அனுமதிக்கப் படவில்லை. மூங்கில் திரைக்கு அப்பால் நிற்க வேண்டியதாயிற்று.

ஆனால், அந்தத் திரையின் வழியாக ஒரு கை நீண்டது. அந்தக் கையில் தந்தத்தினால் செய்த ஒரு சிறிய பொம்மை இருந்தது. அதன் ஒரு பகுதியில் ஒரு அடையாளம் வைக்கப்பட்டிருந்தது. அந்த அடையாளமிட்ட இடம் மாதிரி அந்த நோயாளிப் பெண்ணின் உடலின் பகுதியில் வேதனை இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காகவாம். .