பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்


வருமாறு பணித்தார். அரை நிஜார் அணிந்தபடி, அப்பாவின் கடிதத்தோடு போலீஸ் நிலையத்துக்கு ஒடினேன்.

நான் கொடுத்த கடிதத்தை வாங்கிப் பார்த்த சப் இன்ஸ்பெக்டர் அங்கே உள்ள அறையில் லாக்கப்பில் தள்ளினார். பூட்டி விட்டார். கிட இங்கே” என்று சொல்லி விட்டு அவர் வெளியே போய்விட்டார். எனக்கு எதுவுமே புரியவில்லை. சிறையில் அடைபடுவதற்கு நான் என்ன குற்றம் செய்தேன் என்று எண்ணித் தவித்தேன்.

இரண்டு மணி நேரம் கழித்து அந்தச் சிறையிலிருந்து எனக்கு விடுதலை கிடைத்தது.

அழுகையும் ஆத்திரமும் மேலிட வீட்டுக்கு ஒடி வந்தேன். அப்பாவைக் காரணம் கேட்பதற்குள் அவரே முந்திக் கொண்டார். -

“ஆல்பர்ட், உன் உள்ளமும் உதடுகளும் என்னவோ போலிருக்கின்றன என்று எனக்கு தெரியும். நீ சிறையில் இருந்த நிகழ்ச்சியானது எப்பொழுதும் என் உள்ளத்தை விட்டு நீங்காது. அந்த அருவருப்பை நீ நினைக்கும் போதெல்லாம், அத்தகைய அனுபவம் இனி எப்பொழுதும் நேராமல் இருக்க, நீ கவனமாக இருக்க வேண்டும்” என்று அறிவுரை கூறினார்.

நான் அப்படியே சிலை போல் நின்றேன்!

'அந்த அனுபவமானது என்னை, விழிப்போடு வாழக் கற்றுக் கொடுத்துவிட்டது',.