பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்


மருத்துவர் அந்தப் பொம்மை மீது அடையாளம் இட்ட இடத்தைப் பார்த்துப் பரிசோதனை செய்துவிட்டு, அந்த நோயாளியைப் பார்க்காமலும், தொடாமலும் நோயை யூகித்துக் கொண்டு மருந்து தருவாராம். அந்த மருந்தைச் சாப்பிட்டு விட்டு அந்த நோயாளிப் பெண் குணமடைந்து விட்டாள்!


(29) ர்வாதிகாரியின் சனை


ரஷ்யத் தலைவராயிருந்த ஸ்டாலினுக்கு இசை என்றால் பகையாம். முதல் முறையாக, புதிய பாடல்கள் அரங்கேற்றப்படும் இசை விழாவுக்கு ஒரு முறை வருகைபுரிய நேர்ந்த அவர் ஆத்திரத்தோடு எழுந்து வெளியேறி விட்டாராம்.

காரணம் என்ன? ஒரு ட்யூனைக் கூட விசில் அடிப்பதற்காக நினைவு வைத்துக் கொள்ள இயலவில்லையே' என்றாராம்.

ஸ்டாலின் ரசனையே தனிப்போக்கு உடையது.

பெரிய கிரம்லின் மாளிகையில் அவருக்காக மூன்று அறைகள் தான் உபயோகத்திற்காக ஒதுக்கியிருந்ததாம்.

புலால் உணவில் அவருக்கு விருப்பம் அதிகம். அதிகமான புகைக் குடியர், நாள் ஒன்றுக்கு நாற்பது சுங்கான் காரமான புகையிலையைப் புகைத்து ஊதுவாராம்.

சிகரெட் பிடிப்பது அரிது. ஆனால், சுருட்டு அறவே பிடிக்காது.