50
அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
மூன்றாவது முறை, மிகச் சில மாணவர்களே வந்தனர்.
பொறுமையோ, உண்மையாக உழைப்பில் ஆர்வமோ இல்லாதவர்களை, தாங்களாகவே உற்சாகம் குன்றச் செய்வதற்காகவே அந்தப் பிரபல ஆசிரியர் இந்தத் தந்திரத்தைக் கடைபிடித்தார்.
அதன் பின்னர், எஞ்சிய மாணவர்களிடம், "வகுப்பை இப்பொழுது சலித்தாயிற்று. இனி, வேலையைத் தொடங்குவோம்” என்று கூறினார் அவர்.
(54)
பதில் எழுதாத காரணம்
பிரபல ஆங்கில எழுத்தாளர் ருட்யார்ட் கிப்ளிங் வீட்டில் வளர்த்து வந்த மரத்தின் மீது லண்டனில் ஒடிக்கொண்டிருந்த பஸ் ஒன்று மோதியது.
கிப்ளிங்குக்குக் கோபம் தாங்க இயலவில்லை. பஸ் முதலாளிக்கு டிரைவர் மீது குறை கூறி, கடுமையாகக் கடிதம் எழுதினார் கிப்ளிங். அந்தப் பஸ் முதலாளி ஒரு சிற்றுண்டிச்சாலை முதலாளியும்கூட.
கிப்ளிங் எழுதிய கடிதத்தை, அந்தச் சிற்றுண்டிச் சாலையில் எல்லோருடைய கண்களுக்கும் தெரியும்படியாக வைத்தார் முதலாளி.
அதைப் பார்த்த ஒருவர், நல்ல விலை கொடுத்து அந்தக் கடிதத்தை வாங்கிக் கொண்டார்.