பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்

89


ரோகர்ஸ் நடித்தது அதுவே முதல் படம்!

பின்னர், அவர் நடித்த படங்கள் அனைத்துக்கும் கிராயே கதை எழுதினார்.

முதன் முதலில் துண்டுக் காகிதத்தில் கிராய் என்ன எழுதிக் காண்பித்தார் நடிகர் ரோகர்ஸிடம்?

"பஞ்சத்திலே பணத்தை இழந்தான் பைச்பீட்டர்ஸ்; நிலைமைக்கு ஏற்றபடி, தன் வாழ்க்கையைத் திருத்திக் கொண்டான்” என்று குறிப்பிட்டிருந்தார் கதாசிரியர் கிராய்.


(97) புத்தகம் ழுதத் குதி



தான் எழுத்தாளராகி, புத்தகம் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டான் இளைஞன் ஒருவன்.

மிகவும் உற்சாகத்தோடு, புகழ்பெற்ற பத்திரிகை அதிபர் நார்த் கிளிப்பிடம் சென்று, -

"ஆரம்ப நூலாசிரியனுக்கு வேண்டிய முக்கியமான தகுதி என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்று கேட்டான்.

அவர் மிகவும் அமைதியாக,

"கொஞ்சம் பசி வேண்டும்!" என்றார்