அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
11
டூமாஸ் எழுதுவதில் சலிப்பதில்லை. கை வலித்தபோதிலும் விடுவதில்லை. பல மணி நேரங்கள் - ஏன் பல நாட்கள் கூட எழுதிக் கொண்டே இருந்தவர். தன்னுடைய எண்ண அலைகளுக்குத் தடையாக உணவு உறக்கம் எதுவும் தடையாக இருந்து விடக் கூடாதே என்று அவற்றை மறந்து எழுதியவர்.
ஒரு தடவை 72 மணி நேரம் உட்கார்ந்து ஒரு நாவலை எழுதி முடித்து விட்டார்.
(8) பேசியது எந்த மொழி?
ஐரோப்பியத் தலைநகருக்கு, அமெரிக்க ராஜதந்திரி கார்டல் ஹல் என்பவர் போயிருந்தார்.
அவர் பேசிய வார்த்தைகள் சில ஐரோப்பியர்களுக்கு சில சமயம் ஆங்கிலம் மாதிரியும், சில சமயம் பிரெஞ்சு மாதிரியும் தோன்றின.
அவர்கள் திகைத்துப் போனார்கள். 'ஆங்கிலம்' தான் என சிலரும், 'பிரெஞ்சு' தான் என வேறு சிலரும் சொன்னார்கள். இதனால் பிரச்னை வளர்ந்தது. -
இறுதியில் ஒருவர்,' கொஞ்சம் பொறுங்கள்' அவருடைய பேச்சை, செயலாளர் பிரெஞ்சுமொழியில் மொழிபெயர்க்கிறாரா என்று பார்ப்போம். அவ்வாறு மொழி பெயர்த்தால், அவர் பேசியது ஆங்கிலம்தான் என்பது நிச்சயமாகிவிடும்” என்றார்.